திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Saturday, April 23, 2011

சிஐடியு, ஏஐடியுசி : மேதினச் சூளுரை

-
தமிழ்நாட்டில் மே தினத்தை சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டாட முடிவு செய்துள்ளன. மே தினத்தை சென்னை நகரிலும் மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் ஊர்வலங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் இரண்டு சங்கங்களின் சார்பில் பங்கேற்கும் தலைவர்கள் பட்டியல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.

சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள மேதினச் சூளுரை வருமாறு:

கடுமையான முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியில் உலகம் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் சரியாகிவிடும் என்று சொன்ன ஜோதிடங்கள் எல்லாம் பொய்த்துப் போயின. சரிந்து விழும் நிறுவனங்களை காப்பாற்ற அமெரிக்க அரசும் இதர ஏகாதி பத்திய நாடுகளின் அரசாங்கங்களும் எடுத்த நடவடிக்கைகள் வெற்றிபெற வில்லை.

நெருக்கடி நோயின் மூலகாரணமே முதலாளித்துவ முறைமைதான். அதையே மருந்தாகக் கொடுத்தால், நோய் தீருவது எவ்வாறு சாத்தியம்?

உலகம் முழுவதும் 30 கோடிப்பேர் வேலையிழந்து விட்டனர். பிரிட்டனில் பள்ளிக்கூடத்துக்கு வரும் குழந்தை களில் மூன்றில் ஒருவர் பட்டினியாக வரு வதாகவும், வளர்ச்சிக்கு ஏற்ப காலணி களைப் புதிதாக வாங்க முடியாமல், சிறி தாகிவிட்ட காலணிகளில் கால்களை நுழைப்பதால் புண்ணாகிக் கிடப்பதாக வும், பிரிட்டனின் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

வளர்முக நாடுகளின் மக்களை தள்ளி யது மட்டுமல்ல; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையும் அவலநிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது.

தென்அமெரிக்க மக்கள் வாக்குச்சீட் டைப் பயன்படுத்தி, அராஜக ஆட்சி களைத் தூக்கி எறிந்ததை முந்தைய ஆண்டுகளில் பார்த்தோம். கடந்த ஆண்டில் அரபு உலகம் தீப்பற்றி எரிந்து கொண்டுள்ளது. அரசாங்கத்தை எதிர்த்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாய்ச்சேர்ந்து நின்று வீதிகளில் இறங்கிப்போராடுகின்றனர். அவிழ்த்து விடப்படும் அனைத்து அடக்குமுறை களையும் எதிர்த்து நிற்கிறார்கள். டுனீ ஷியாவில் முதலில் எடுத்த போராட்டம் அரசுப்பொறுப்பில் இருந்தவர்களை அகற்றியது. பின்னர் எகிப்தில் 30 ஆண்டு களாகக் கொடூர ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி முடித்து வைக்கப் பட்டது. லிபியாவின் சர்வாதிகாரியான கடாபியை எதிர்த்த போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. யேமன், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுக ளிலும் தெருக்கிளர்ச்சிகள் நடக்கின்றன.

தமது பொம்மைகளாக இருந்த சர் வாதிகாரிகள் மக்களின் சுனாமி எழுச்சி யில் காணாமல் போன நிலையில், புதிய பொம்மைகளை நுழைக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தீவிரமாக முயன்று வரு கிறது. இதற்காக போராடும் மக்களுக்கு ஆதரவு தருவது போல பச்சையாக நடித்து வருகிறது.

அத்தனை அதிகாரங்களையும் தனக் குள்ளேயே முடக்கிவைத்துக்கொள்வதா லும், ஜனநாயக சக்திகளை அடக்கு முறைகளால் ஒடுக்கி வைப்பதாலும், லஞ்ச ஊழல்களால் பெரும் செல்வத் தைக் குவித்து சேமித்து வைத்துக் கொள் வதாலும் ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள யாராலும் முடியாது என இந்தக் கிளர்ச்சிகள் மெய்ப்பித்து விட்டன.

ஒரு மாதத்திற்கு மேலாக பிரான்ஸை நிலைகுலையச்செய்த பிரெஞ்ச் தொழி லாளர் வேலைநிறுத்தம், ஓய்வூதியம் கோரி நடந்தது. ஸ்பெயின், பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா, கிரீஸ், போர்ச் சுக்கல், ஜெர்மனி, தென்கொரியா என அடுக்கடுக்காக வேலையின்மை, சம்ப ளம், வாழ்க்கை மேம்பாடு கோரி தொழி லாளர்கள் போராடினர். உலகத்தொழிற் சங்க சம்மேளனத்தின் 16வது மாநாடு ஏப்ரல் 6 முதல் 10வரை ஏதென்ஸில் நடைபெற்றது. 106நாடுகளிலிருந்து 881 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அளவில் தொழிலாளர் போராட்டமும், தொழிற்சங்க ஒற்றுமையும் அதிகரித்து வருகின்றன.

நம் பாரத தேசத்தில், இந்த ஆண் டுக்கு, ஊழல் ஆண்டு எனப் பெயர் சூட்டி விடலாம் என எண்ணும் வகையில் சிக ரத்தை தொட்ட ஊழல்கள் நடந்துள்ளன.

ஊழல் தடுப்பு ஆணையராக, ஊழல் செய்த பி.ஜே.தாமஸ் என்பவரை அரசு நிய மித்தது. உண்மை வெளிப்பட்டபின்பும், அவர் வெளியேறவில்லை ; கடைசியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுத்தான் அவர் பதவி பறிக்கப்பட்டது. கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை, அமைச்சர்களும், அதிகாரி களும், ராணுவ உயர் அதிகாரிகளும் சேர்த்து ஆக்கிரமித்துக்கொண்ட கொடு மையும் உச்சநீதிமன்றத் தலையீட்டா லேயே நடவடிக்கைக்கு ஆளானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற் பனையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல், அதை மறைக்க அமைச்சர்கள் பேசிய பேச்சுக்கள், அமைச்சர்களை நியமிப்பதில் இடைத்தரகர்களின் ஆதிக் கம் குறித்து வெளியான ஒலிநாடாக்கள், மத்தியஅமைச்சர் ஆ.ராசா வீட்டில் சோத னை, அவரது ராஜினாமா, கைது, சிறை யில் அடைத்தது. தமிழ்நாட்டில் முதல்வர் குடும்பத்தினரே மத்திய புலனாய்வுத் துறையால் விசாரணைக்கு ஆளானது, அவர்களது தொலைக்காட்சி நிறுவனம் சோதனைசெய்யப்பட்டது என பல அத்தி யாயங்கள் கொண்டதாக விரிந்து கொண்டே போகிறது.

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்ப பெற்றபின்பு, தனது ஆட்சியை நிலைக்கச் செய்ய கோடி கோடியாய் காங்கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங் களும் வெளியாகி இருக்கின்றன.

“இந்த நாட்டில் என்னதான் நடந்து கொண்டு இருக்கிறது” என்று உச்சநீதி மன்றமே திகைத்துக்கேட்கும் அளவுக்கு மத்திய ஆட்சியில் உள்ள கூட்டணி அரசும், அதற்குத்தலைமை ஏற்கும் காங் கிரஸ் கட்சியும் நாட்டை தரம் தாழ்த்தி இழுத்துக்கொண்டு சென்றன.

அதேநேரத்தில் மகளிர் 33சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற் றப்படவில்லை. உணவுப்பாதுகாப்பு மசோதாவைப் பற்றி ஏராளமாக விவாதித் தும் கூட, இதுவரை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தக்கூட இல்லை.

விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. அடுத்தமாதம் சரியாகிவிடும் என்று அலுக்காமல் பொய் சொல்கிறது அரசாங்கம். பதுக்கல்காரர்களும், கள்ளச் சந்தையினரும் பகிரங்கமாகத் திரிகின்ற னர். வெங்காயவிலை 100 ரூபாயை தாண் டியபோது, ஒரு பதுக்கல்காரனைக்கூட இந்த அரசால் கைதுசெய்ய முடியவில் லை. அவ்வளவு பலவீனமாக இந்திய அரசுஇருக்கிறது.

அதே நேரத்தில் பன்னாட்டு கார்ப் பரேட் நிறுவனங்களுக்கும், உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் எண்ணிலடங் காத சலுகைகளை வாரி வழங்கி வருகி றது. ஆனால் ஏழை மக்களின் அவலங் களை நோக்கிக் கண்ணைத் திருப்ப மறுக்கிறது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோ தக்கொள்கைகளைக் கண்டித்து, ஐஎன் டியுசி உள்ளிட்ட இந்திய தொழிற்சங்கங் கள் இணைந்து போராடி வருகின்றன. இந்தியத் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கைகளை இந்த ஒற்றுமை தோற்று விக்கிறது. செப்டம்பர் 7ல் நடந்த வேலை நிறுத்தம் இந்தியாவில் மிகப்பெரிய வேலைநிறுத்தமாகும். மார்ச் 5ல் சிறை நிரப்பும் போராட்டத்தில்10லட்சம் தொழி லாளர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதன் முடிவு தெரிய ஒருமாதக்காலம் காத்தி ருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஓர் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை தந்து, எதிர்த்தரப்பினரை ஆள் பலம் கொண்டு அச்சுறுத்தி, அதிகாரி களைத் தனது விருப்பத்திற்கேற்ப வளைத்து கடந்த ஆண்டுகளில் இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றிபெற் றது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக் கும் இந்த நடைமுறைக்கு திருமங்கலம் பார்முலா என்று ஊடகங்கள் பெயர் வைத்தன. இந்தப் பொதுத்தேர்தலில் ஊழல் நடைமுறைகளை எதிர்த்து மக்கள் அணிதிரண்டுள்ளனர்.

இந்த பொதுத்தேர்தலிலும் அவ்வாறே நடத்த எத்தனித்ததை,தேர்தல் ஆணை யம் எதிர்த்து நின்றது பாராட்டுக்கு உரிய அம்சமாகும். முன்பு போல பணப்பரிவர்த் தனைகளை பகிரங்கமாக நடத்தமுடியா மல் ஆணையம் தடுத்தது. ஆனாலும் ரக சியமாக “ஓட்டுக்கு துட்டு” தரப்பட்டது. பல கோடி ரூபாய்களை ஆணையம் கைப்பற்றியது. அது ஒரு சிறிய பகுதியே. எனினும் “ஆட்சி கையில் இருந்தால் எதையும் செய்யலாம்; அதை தடுத்து நிறுத்துவதற்கு வழியே இல்லை” என்று ஏங்கி கிடந்த மக்களுக்கு, ஆணையத் தின் நடவடிக்கையால், ஜனநாயகத்தின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை காணாத அளவுக்குத் திரண்டு வந்து வாக்களித்தது இதனை நிரூபிக் கிறது.

தமிழகத்தில் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குஅதிக சலுகைகள் கொடுத்து கதவை திறந்துவிட்டது மாநில அரசு. அதே நேரத்தில் நடுத்தர, சிறு,குறு தொழில்கள் அழிக்கப்பட்டன. வரலாறு காணாத மின்வெட்டு, தொழில்களை நாசப்படுத்திவிட்டது. பாரம்பரியத் தொழில்களான கைத்தறி, பீடி, கயிறு தயா ரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நலிந்து, அதில் பணிபுரிந்தோர் நடுவீதிக்குத் தள் ளப்பட்டனர். நிரந்தரத்தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, எங்கும், எதிலும், ஒப்பந்தத் தொழிலாளர் முறை கொண்டுவரப்பட்டுவிட்டது.

தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான சட்டம், சுமங்கலித் திட்டம் என்ற நவீன பஞ்சாலைக்கொத்தடிமை முறைக்கு தீர்வு, ஒப்பந்தக்கூலிமுறை ஒழிப்பு, தொழிலாளர் சட்டங்களை அமலாக்கு தல், சமவேலைக்கு சம ஊதியம், குறைந் தபட்ச ஊதியத்தை அதிகரித்து கறாராக அமல் செய்தல், அமைப்புசாரா வாரியங் களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக் குத்தீர்வு, நல உதவிகளை அதிகரித்தல் என தமிழகத்தொழிற்சங்க இயக்கம் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற் றாமலேயே தனது ஆட்சியை முடித்து விட்டது தற்போதைய அரசு. புதிய அரசு இவற்றை நிறைவேற்ற வேண்டும். முடக்கி வைக்கப்பட்டு, செயலிழந்து விட்ட தொழிலாளர் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடின் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் தீவிரப்படும்.

ஐந்து மையமான கோரிக்கைகளை முன்வைத்து ஐஎன்டியுசி உட்பட இந்தி யாவின் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து நடத்தும் இயக்கம் மேலும் வலுப் பெற வேண்டும். இந்த ஒற்றுமையை மேலும் முயன்று கட்ட வேண்டும். தொடர்ந்து வரும் கூட்டு இயக்கங்களை அதிக சக்தியுடன் நடத்தவேண்டும். ஏதுமற்றவர்களாய் இருந்த தொழிலாளி வர்க்கம், போராடிப் போராடித்தான் புதிய உரிமைகளை வென்றெடுத்தது. தொழி லாளி வர்க்கத்திற்கு போராடுவதைத் தவிர உத்தரவாதமான வேறு வழிகள் இல்லை.

இந்த உரிமைப்போரில் உலகம் முழு வதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது உயிரை இழந்துள்ளனர். பல லட்சக் கணக்கானவர்கள் தமது உடமைகளை இழந்தனர். அவர்களின் மாபெரும் தியா கங்களைப் பெருமையோடு நினைவு கூர்ந்து, அந்தப்போராளிகளின் வாரிசுக ளாகப் புதிய போராட்டங்களை முன்னெ டுக்க இந்த மே நன்னானில் உறுதி யேற்போம்.




தீக்கதிர்

No comments:

Post a Comment