திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Thursday, February 3, 2011

(கோவிந்தசாமி) துரோகசாமி

நீ குடித்து முடித்த
டீ கிளாசை
இரு கையாலும்
ஏந்திக் கொண்ட தோழன்

உன் நாற்காலிக்காக
தன் நரம்புகளை
பின்னக் கொடுத்த தோழன்...

பட்டினி கிடந்தாலும்
உன் பசியாற்றி,
பயணப்படியோடு
வழியனுப்பிய தோழன்

உலகைக் குலுக்கும்
செங்கொடி உயர்த்தி,
உண்டியல் குலுக்கி உனை
வேட்பாளராக்கிய தோழன்....

கோடிகளை சுருட்டும்
கோமான்களை எதிர்க்க
உன்னை கோட்டைக்கு
அனுப்பிய தோழன்

எல்லாம் மறந்த
என் முன்னாள் தோழா!

முதலாளித்துவத்திற்கு
பரிவட்டம் கட்டி
பல்லக்கு தூக்க
முதுகு காட்டிவிட்டாய்!

இட்ட பெயர் உனக்கு
எதுவாகவும் இருக்கலாம்!

தொழிலாள் வர்க்கத்திற்கு
துரோகம் இழைத்த உன்னை
வரலாறு பதிவு செய்யும்
“துரோகசாமி”
என்றே!


-க.பாலபாரதி (நன்றி-தீக்கதிர்)

No comments:

Post a Comment