திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Thursday, August 15, 2013

பண்பாட்டுச் சூழலை ஆய்வு செய்யக் கூடுவோம்!






பண்பாட்டுச் சூழலை ஆய்வு செய்யக் கூடுவோம்!
ச.தமிழ்ச்செல்வன்















 
இனக்குழுக்களாக வாழ்ந்த காலம் தொட்டு மனித இனம் வாழ்ந்த வாழ் முறையே பண்பாடாகிறது. ஒவ்வொரு குழுவுக்கும் எனத் தனித்த பண்பாட்டு அசைவுகள் உண்டு.பண்பாட்டு அடை யாளங்கள் உண்டு.மனிதர் பேசத்துவங்கி, தமக்கான மொழியை உருவாக்கிக் கொண் டது பண்பாட்டு வரலாற்றில் ஒரு பாய்ச் சலாக அமைந்தது.சிறு சிறு கணக் குழுக்கள் இப்போது ‘ஒரு மொழி பேசும்’ குழுக்களாக விரிந்தன.மொழியின் வரு கை சிந்தனைப்பரிமாற்றத்தில் ஆழ அகலமான வேகத்தை ஏற்படுத்தியது.
மனித இனம் என்கிற பொதுமை அம்சங் களோடு கூடவே ஒவ்வொரு இனக்குழு வின் தனித்த அடையாளங்களும் அழுத்தமாக வரலாறு நெடுகிலும் கூடவே வந்தன.வந்துகொண்டே இருக்கின்றன.முற்போக்கும் பிற்போக்குமான வாழ்க்கை நடைமுறைகள், நடை, உடை, பாவனைகள், நம்பிக்கைகள், சடங்கு கள், உணவு முறைகள் எனப் பண்பாட்டுத் தளத்தில் எல்லாமே இருக்கின்றன. அறி வியல் வளர்ச்சியும் புதிய கண்டுபிடிப்பு களும் பண்பாட்டால் தொடர்ந்து எதிர் கொள்ளப்பட்டும் உள்வாங்கப்பட்டும் நகர்ந்துள்ளது. ஜனநாயக யுகத்தில் உலகம் நுழைந்துவிட்ட பின்பு உலகத் துக்குப் பொதுவான மனித மாண்புகள்-உலகப்பண்பாடு பற்றி உலக மன்றங்க ளில் மனிதர்கள் பேசத்துவங்கினர்.இந்தியாவின் சிறப்பு அசிங்கமான சாதியக்கட்டமைப்பு இந்தியாவின் வர்க்க வடிவமாகவும் இருக்கும் அதே நேரத்தில் பண்பாட்டு நிறுவனமாகவும் இருந்து மனித மனங்களைக் கட்டமைக்கும் பணியைச் செய்கிறது.
அரசியல் அரங்கில் புதிய திறப்பாக அமைந்த இந்திய அரசி யலமைப்புச் சட்டம் இந்த தேசம் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசு எனப் பகிரங்கமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. எனினும் பண்பாட்டுத் தளத்தில் மதச் சார்பின்மையை ஜனநாய கத்தைக் கொண்டுவர இன்றுவரை இயல வில்லை.பண்பாட்டை ஜனநாயகப்படுத் திடப் பல இயக்கங்கள் இந்த மண்ணில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளன. தமிழகத் தில் வள்ளலார்,வைகுண்டர் போன்றோ ரின் நம்பிக்கை சார்ந்த இயக்கங்களும் சுய மரியாதை இயக்கம், பொதுவுடமை இயக் கம், திராவிட இயக்கம்,தலித் இயக்கம், பெண் விடுதலை இயக்கம் போன்ற பகுத் தறிவு சார்ந்த அறிவியல்பார்வையோடு கூடிய இயக்கங்களும் முற்போக்கான பண்பாட்டை வளர்த்திடப் பெரும் பங் காற்றியுள்ளன.ஆற்றி வருகின்றன.ஆனாலும் இன்று வரலாற்றைப் பின் னோக்கி இழுக்கும் சக்திகள் பண்பாட்டு மேடையில் நின்று அரசியல் நடவடிக் கைகளை எளிதாக மேற்கொள்ள முடி கிறது. அது ஓரளவு மக்கள் செல்வாக்கை யும் பெற முடிகிறது.
இதை எப்படிப் புரிந்து கொள்வது?பன்னாட்டு நிதி மூலதனம் தன் சக்தி மிக்க ஊடக வலைப்பின்னலின் உதவி யோடு மக்களை சொந்த அடையாளங்கள் அழித்து நுகர்வோர் என்னும் கழுத்துப் பட்டியை மாட்டித் தன் பின்னால் இழுத்துச்செல்லும் அதே நேரத்தில் நம்பிக்கையின் பெயரால் சேது சமுத்திரம் போன்ற வளர்ச்சித்திட்டங்கள் நிறுத்தப் படுவதும் சாதியச் சிமிழுக்குள் தமிழ் மக்களின் வாழ்க்கையை அடைக்க முயலும் சக்திகள் அணி திரட்டி அலை வதும் நடந்துகொண்டே இருக்கிறது. பொது வெளியில் பெண்கள் நடமாட்டம் பாராட்டத்தக்க அளவுக்கு வளர்ந்திருக் கும் அதே நேரத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட தாக்குதல் கள் அளவற்றுப் பெருகிக்கொண்டே செல்கின்றன. பெண்கள் வாழத்தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்கா வது இடத்தைப் பிடித்துள்ளது.ஊழலுக்கு எதிராக ஒரு பெரியவரை முன்னிறுத்தி பல்லாயிரம் பேர் நாடெங்கும் தேசக்கொடி யசைத்துப் போராடினார்கள்.பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து ஏன் போராட்டம் இல்லை.இளவரசன் கொ லையைத் தமிழகக் குடிமைச்சமூகம் வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டது எவ்வாறு?மனித மனங்களைத் தகவமைத்து ஆளும் வர்க்கத்தின் தேவைக்கேற்ற மனிதர்களாக மாற்ற பண்பாட்டு நிறு வனங்கள் இரவுபகலாகப் பாடுபடுகின் றன.
குடும்பம், சாதி, மதம், கல்விச் சாலைகள், ஊடகங்கள் எனப் பல பண் பாட்டு நிறுவனங்கள் நம் ஒப்புதல் இல் லாமலேயே நம்மை ஆளும் வர்க்க சித்தாந்தப் பிடிக்குள் தள்ளி விடுகின் றன. உடம்பால் தொழிலாளி வர்க்கமாகவும் உள்ளத்தால் ஆளும் வர்க்க சிந்தனை யோடும் வாழும் இரட்டை நிலையில் நம்மைத் தள்ளுகின்றன.உடம்பால் பெண் ணாகவும் உள்ளத்தால் ஆணாதிக்க சிந்தனையாளராகவும் வாழப்பழக்கப் படுத்துகிறார்கள்சிவில் சமூகம் எனப்படும் குடிமைச் சமூகமும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கமும் வேறு வேறென்று மக்கள் மனதில் பதிய வைத்தது யார்? எவ்விதம்? இரண்டும் ஒன்றுதான் ஒரே அமைப்பின் இரண்டு அங்கங்கள்தாம் என்பதை விளக்குவது எவ்வாறு?இவற்றையெல்லாம் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?இவற்றுக்குப் பின் னால் இயங்கும் பண்பாட்டு அரசியல் என்ன? இன்று தமிழகப்பண்பாட்டுச் சூழலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்,முன்னுக்கு வந்துள்ள முக்கியமான சவால்கள் -இவற்றைப்பற்றி , அவற்றின் வரலாற்றுப் பின்னணியோடு, விரிவாக ஆய்வு செய்து, தமுஎகசவின் எதிர்காலச் செயல்பாட் டுக்கான திட்டங்களை வடிவமைப்பதற் காகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மாநில அள விலான ஒரு சிறப்பு மாநாட்டினை ஆகஸ்ட் 17,18 (சனி, ஞாயிறு) தேதிகளில் தூத்துக்குடியில் பானு பிருந்தாவன் திருமண மண்டபத்தில் நடத்துகிறது.
மாநி லம் முழுவதுமிருந்து 300 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கிறார்கள். தமுஎகச தலைவர்களும் தி ‘இந்து நாளிதழின் வாசகப்பகுதி ஆசிரியரும் புகழ்பெற்ற பத்திரிகையாளருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வம் மாநாட்டில் இருநாட்களும் பங்கேற்கிறார். நமக்குள் பொங்கி எழுகின்ற பண்பாடு குறித்த நூறு நூறு கேள்விகளுக்கு விடை தேடி தூத்துக்குடியில் மாநாடு கூடு கிறது. கீழ்க்கண்ட ஏழு தலைப்புகளில் கட்டு ரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற உள்ளது.
1. தாய் மொழி வழிக்கல்வியை மீட் டெடுப்போம்2. மதவெறி அரசியலும் சேது சமுத் திரத் திட்டமும்3. சாதியப்பாகுபாடும் வன்கொடுமை களும்4. பாலினப்பாகுபாடும் பெண்கள் மீதான வன்கொடுமையும்..5. ஊடகங்களின் அரசியல்6. சமகாலப் படைப்பிலக்கியம் முன் வைக்கும் அரசியல்7.மாற்றுப்பண்பாடு சில முன் வைப்புகள்
ஒவ்வொரு கட்டுரையும் மூன்று பகுதி களைக் கொண்டதாக அமைந்துள்ளன. பிரச்னையின் வரலாறு, இன்று அதில் நாம் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் சவால், இப்பிரச்சனையின்பால் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறை மற்றும் எதிர் கால வேலைத்திட்டம் என்பதான மூன்று பகுதிகளாக எல்லாக் கட்டுரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் 150 பக்க புத்தகமாக தொகுக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிரதிநிதிகள் முன்கூட்டியே வாசித்து விட்டு வந்து மாநாட்டில் விவாதித்து இறுதிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.பண்பாட்டுத்தளத்தில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வாக –தமிழக முற் போக்குப் பண்பாட்டு இயக்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தப்படியாக-பண் பாட்டுப் போராட்டங்களுக்குப் படைப்பா ளிகளின் அர்த்தமுள்ள செறிவான பங்க ளிப்பாக இம்மாநாடு மலரவிருக்கிறது. தமிழ் கூறு நல்லுலகிற்கு தமுஎகச-வின் பண்பாட்டு கொடையான கலை இரவு 18ஆம் தேதி தூத்துக்குடி நகரில் பால விநாயகர் கோவில் தெருவில் நடை பெறவுள்ளது. மாநாட்டில் விவாதிக்கப் பட்ட பொருள் குறித்தும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் தமுஎகச தலை வர்கள் இந்த கலை இரவின் வழியாக மக்களுக்கு தெரிவிக்கவுள்ளனர். தமிழகப் படைப்பாளிகளின் கவனம் தூத்துக்குடி நோக்கித் திரும்பட்டும். கட்டுரையாளர், தமுஎகசவின் மாநிலத் தலைவர்