திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Tuesday, March 10, 2015

தமுஎகச சார்பில் தோழர் ஐ.மா.பா. நினைவஞ்சலி கூட்டம்

மதுரை, மார்ச் 10-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மறைந்த சுதந்திரப்போராட்ட வீரரும் பொதுவுடைமை இயக்கப் போராளியுமான தோழர் ஐ.மாயாண்டி பாரதி நினைவஞ்சலிக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.மூட்டா அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரசா தலைமை வகித்தார்.தோழர் ஐ.மாயாண்டிபாரதி குறித்து மூத்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.இதில் மாநிலதுணைத்தலைவர்கள் என்.நன்மாறன், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ந.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கவிதாகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். மதுரை ராயப்பன், தோழர் ஜ.மா.பா.குறித்து பாடல் பாடினார். மாவட்டச் செயலாளர் சாந்தாராம் நன்றி கூறினார்.

நன்றி தீக்கதிர்

No comments:

Post a Comment