திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Thursday, July 29, 2010

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்-அழைக்கிறோம்

நாடாளுமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும்

தமிழைப்

பயன்பாட்டு மொழியாக்கக் கோரிப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட்-6,2010

மாலை-4 மணி : மெமோரியல் ஹால் எதிரே,சென்னை-சென்ட்ரல் அருகே




தலைமை

சிகரம் ச.செந்தில்நாதன், வழக்கறிஞர்

பங்கேற்போர்

டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்

எஸ்.கே. மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்

ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

விடுதலை இராஜேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்

சு.வெங்கடேசன், துணைப்பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

என்.ஜி.ஆர். பிரசாத், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

ஆர்.வைகை, வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

பால் கனகராஜ், தலைவர், சென்னை பார் கவுன்சில்

பிரசன்னா, தலைவர், பெண்வழக்கறிஞர்கள் சங்கம்

சே.சு.பாலன் ராஜா, வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

இரா.மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம்

பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம்

அ.குமரேசன், பத்திரிகையாளர்

மயிலை பாலு, பத்திரிகையாளர்

பிரம்மா, ஊடகவியலாளர்

தியாகச்செம்மல், ஊடகவியலாளர்

பிரளயன், நாடகவியலாளர்

பா.வீரமணி, ஆய்வாளர்

பிரின்ஸ், கல்வியியலாளர்

ந.ஸ்டாலின், சட்டம், முதுநிலை அம்பேத்கர் சட்டக்கல்லு ரி

ம.நா.குமார், எஸ்.எப்.ஐ, அமைப்பாளர்

மணிநாத், தலைவர், வடசென்னை

கி.அன்பரசன், செயலாளர், தென்சென்னை

நா.வே.அருள், செயலாளர், வடசென்னை

விடியல் கலைக்குழு, தென்சென்னை சக்திக்கலைக்குழு

போக்குவரத்து அரங்கம் வி பி சி கலைக்குழு

புதுயுகம் இசைக்குழு, பகத்சிங் இசைக்குழு, தமிழ்ஒளி இசைக்குழு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

வடசென்னை தென்சென்னை

நீதிமன்றத்தில் தமிழ்

அரசியல் சட்டத்தின் 348ஆம் பிரிவு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்கிறது. சுதந்திர இந்தியாவில் இந்த நிலையை மாற்றிட அரசியல் சட்டத்தைத் திருத்தினால்தான் முடியும். அதனால் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். அதே சட்டத்தின் உட்பிரிவு உயர்நீதிமன்றங்களின் பயன்பாட்டு மொழியாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் திகழமுடியும் என்கிறது. அதற்கு தமிழகச் சட்டமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றவேண்டும். பின்னர் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று, தமிழை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்திட ஆளுநர் அதிகாரம் வழங்கமுடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகச் சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாயிற்று. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியாயிற்று. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்பது மத்திய அரசின் ஒப்புரல்தானே? ஆனால் ஏன் இன்றுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட, மனுக்கள் தாக்கல் செய்ய, தமிழக அரசு மத்திய அரசிடம் வாதாடவேண்டும். போனது போகட்டும். இனியாவது வாதாடுமா?

நாடாளுமன்றத்தில் தமிழ்

அரசியல் சட்டத்தின் 120 ஆம் பிரிவில் நாடாளுமன்ற அலுவல்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைத்தலைவரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் பேசலாம். ஆனால் அமைச்சர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பதிலளிக்கவேண்டும். இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாத ஒருவர் மத்திய அரசியல் அமைச்சராக செயல்பட முடியாது. இது பெரும் அநீதி. நமது நாட்டு நாடாளுமன்றத்தில் நமது மொழியில் பேச முடியாது. இது நமது சுயமரியாதைக்கு இழுக்கு. வாக்களித்து அனுப்பிய மக்களுக்கு அவமரியாதை. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவரவர் தாய்மொழியில் பேசவும் அதை உடனுக்குடன் அவரவர் மொழியில் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். இந்த விஞ்ஞான யுகத்தில் இது எளிதான காரியமே. எவ்வளவு செலவாகிப்போகும்? ஆகட்டுமே. கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுகிற பல்லாயிரம் கோடி பணத்தோடு ஒப்பிடும்போது இது வெறும் கொசுறு.

(மாநாட்டுக்கு 400 கோடிதமிழுக்கு…? நூலிலிருந்து)

________________________________________________________________________________________________________

உழவுத்தமிழனை

உழைப்புத்தமிழனை

நெசவுத்தமிழனை

பசித்த தமிழனை

தாழ்த்தப்பட்ட

சாதித்தமிழனை

சபிக்கப்பட்ட

சேரித்தமிழனை

மலைகளில் வாழும்

ஆதித்தமிழனை

மலங்களை அள்ளும்

வீதித்தமிழனை

கடலுக்குள் மூழ்கும்

உப்புத்தமிழனை

கரைகளில் வாழும்

குப்பத்தமிழனை

உலைக்களம் வேகும்

நெருப்புத்தமிழனை

செருக்களம் சாகும்

துருப்புத்தமிழனை

இறுக்கிடும் சங்கிலி

எவையோ அவைதான்

என்தமிழ்த்தாயை

இறுக்கிடும் தளைகள்

//தணிகைச்செல்வன்//

No comments:

Post a Comment