திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Tuesday, March 10, 2015

குறிஞ்சி மலராக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிய திருப்பூர் புத்தகத் திருவிழா

திருப்பூர், மார்ச் 10-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை மலர வைத்துள்ளது என்று வரவேற்புக்குழு நிர்வாகிகள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்,பாரதி புத்தகாலயம் இணைந்துநடத்திய 12வது புத்தகத் திருவிழாவின் நன்றி அறிவிப்புக் கூட்டம் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் திங்களன்று வரவேற்புக்குழுத் தலைவர் கே.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது.
இதில் வரவேற்புக்குழு துணைச் செயலாளர் எஸ்.சுந்தரம் வரவேற்றார்.இதில் திருப்பூர் தெற்குதொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல், வரவேற்புக்குழுச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் புத்தகத் திருவிழாவின் சிறப்புகளை குறிப்பிட்டுப் பேசினர். இந்த நகரத்து மக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதிலும், குழந்தைகள், பெண்களை ஈர்ப்பதிலும் புத்தகத் திருவிழா சிறப்பாக முத்திரை பதித்திருக்கிறது என்றும், இன்னும் விரிவாகவும், சிறப்பாகவும் இந்த புத்தகத் திருவிழாவை தொடர்ச்சியாக நடத்தவும், அனைத்துத் தரப்பினர், அமைப்பினர் சேர்ந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதில் வீனஸ் பழனிச்சாமி, லிங்க்ஸ் சௌகத் அலி, பிரிண்டிங் குமாரசாமி, வி.டி.சுப்பிரமணியம், கேரவன் ஆறுமுகம், ஆடிட்டர் லோகநாதன், கே.காமராஜ் உள்பட வரவேற்புக்குழு நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர் நிறைவாக பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறி னார்.
தமுஎகச சார்பில் தோழர் ஐ.மா.பா. நினைவஞ்சலி கூட்டம்

மதுரை, மார்ச் 10-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மறைந்த சுதந்திரப்போராட்ட வீரரும் பொதுவுடைமை இயக்கப் போராளியுமான தோழர் ஐ.மாயாண்டி பாரதி நினைவஞ்சலிக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.மூட்டா அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரசா தலைமை வகித்தார்.தோழர் ஐ.மாயாண்டிபாரதி குறித்து மூத்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.இதில் மாநிலதுணைத்தலைவர்கள் என்.நன்மாறன், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ந.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கவிதாகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். மதுரை ராயப்பன், தோழர் ஜ.மா.பா.குறித்து பாடல் பாடினார். மாவட்டச் செயலாளர் சாந்தாராம் நன்றி கூறினார்.

நன்றி தீக்கதிர்