திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Sunday, November 28, 2010

சமுதாய லட்சியத்தோடு படைத்திட எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்

சமுதாய ஏற்றத்தாழ்வு களுக்கு முடிவு கட்டும் லட்சி யத்தோடு எழுத்தாளர்கள் தொடர்ந்து படைப்புகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கியப் பரிசுகள் (2009) வழங்கும் விழா சனிக்கிழமை அன்று (நவ. 27) சென்னையில் நடை பெற்றது. சங்கத்தின் தென் சென்னை மாவட்டக்குழு ஏற் பாடு செய்திருந்த இந்த விழா வில் உரையாற்றிய மாநிலப் பொதுச் செயலாளர் ச. தமிழ்ச் செல்வன் படைப்பாளிகளின் சமுதாய நோக்கம் என்றென் றும் தொடர வேண்டும் என்றார்.

“ஒவ்வொருவருக்கும் எழுத் தாற்றல் இருக்கிறது. கிராமங் களில் சாமி ஆடுவார்கள். சாதா ரணமாக சாமி வந்துவிடாது. அருகிலிருந்து மேளக்காரர் கள் கொட்டடிப்பார்கள். அப் போது தானாக ஆட்டம் வரும். அவ்வாறு ஒவ்வொருக்கும் இருக்கிற படைப்பாற்றல் என்ற சாமியை வெளியே கொண்டு வர கொட்டடிக்கும் பணியைத் தான் தமுஎகச செய்து வரு கிறது,” என்றார் அவர்.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ. பெருமாள் பேசுகையில், உயர்ந்த அதிகாரியாக இருந்த போதிலும் மறைந்த எழுத்தா ளர் சு. சமுத்திரம் எளிய மக்க ளோடு கலந்து நின்றதை நினைவு கூர்ந்தார். மாநிலப் பொருளாளர் இரா.தெ. முத்து, வடசென்னை மாவட்டச் செய லாளர் நா.வே. அருள் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.

எழுத்தாளர் சு. சமுத்திரம் நினைவு விளிம்புநிலை மக் கள் - இலக்கியப் பரிசு ‘யார் அந்த பஞ்சமர்? ஒரு தொலைந்த உலகு’ நூலை எழுதிய கே. கங்காதரனுக்கு வழங்கப்பட் டது. பெருமாயி குப்பண்ணன் நினைவு நாவல் - இலக்கியப் பரிசு ‘அறுபடும் விலங்கு’ எழு திய கரன்கார்க்கி, தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூல் - இலக்கியப் பரிசு ‘தமிழி சையும் இசைத்தமிழும்’ எழு திய முனைவர் அரிமளம் சு. பத்ம நாபன், எழுத்தாளர் புதுமைப் பித்தன் நினைவு சிறுகதை இலக்கியப் பரிசு ‘பிறிதொரு மரணம்’ புத்தகத்தை எழுதிய உதய சங்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

அகிலா - சேதுராமன் நினைவு குழந்தை - இலக்கியப் பரிசு, செல்வன் கார்க்கி நினைவு கவிதை - இலக்கியப் பரிசு ஆகிய இரண்டும் ‘அமே சான் காடுகளும் சகாரா பாலை வனமும் எப்படித் தோன்றின’, ‘குளம்பொலி ஞானங்கள்’ ஆகிய இரு புத்தகங்களையும் எழுதிய பெ. கருணாகரன், தமி ழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவு மொழிபெயர்ப்பு - இலக்கியப் பரிசு ‘அமினா’ என்ற நைஜீரியாவைச் சேர்ந்த முக மது உமர் எழுதிய நூலை மொழி பெயர்த்த பேராசிரியர் தருமி ஆகியோருக்கு வழங்கப்பட் டன.

பரிசுக்குரிய நூல்கள் குறித்து தேர்வுக் குழுக்களின் தலைவர்களாகச் செயல்பட்ட எஸ்.ஏ. பெருமாள், சோலை சுந் தர பெருமாள், திருப்பூர் ஈஸ் வரன், அ. குமரேசன், மயிலை பாலு, நாகை காவியன் ஆகி யோர் உரையாற்றினர்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் சைதை ஜெ. தலை மையில் நடந்த இந்த விழா வில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் கி. அன்பரசன் வர வேற்றார். சிவசெந்தில் நன்றி கூறினார். சு. சமுத்திரத்தின் புதல்வி அமுதா ரமேஷ் உள் ளிட்டோர் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டனர். முன்னதாக இப்புத்தகங் களைக் குறித்து அறிமுகப் படுத்தும் குறும்படம் திரை யிடப்பட்டது . இதனை தயா ரித்த ரகுநாத், விஜயன், குரல் வழங்கிய சிறுமி சிநேகா ஆகி யோர் கவுரவிக்கப்பட்டனர்.

செய்தி தீக்கதிர்
29/11/2010